Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

   

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player







   

   










மயிலிட்டி பெயரை முதன் முதலாக இணைய உலகத்திலும், கூகிளிலும், வானொலியிலும். பதித்த. மயிலிட்டி டொட் கொம் 7 வது ஆண்டில் கால் பதித்துள்ளது. மயிலிட்டி டொட் கொம் மிகவும் சந்தோசத்துடன் மிக உற்சாகமாக மயிலிட்டி மக்களுக்காக இலவசமாக சேவையாற்றி பெருமிதம் அடைகின்றது. எமது வளர்ச்சிக்கு உதவி புரிந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாம் தலை வணங்கி நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

ஒன்றே செய்யினும்
நன்றே செய்வாய் அதை
எப்படியும் செய்வாய்
மயிலிட்டி வளர்ச்சிக்கு
நன்றி
___________________________________________________________________________
___________________________________________________________________________

கனடாவில் (25-12-2011) நத்தார் தினத்தன்று நண்பர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்டது.


___________________________________________________________________________


மயிலிட்டி டொட் கொம் வானொலி ஒலிபரப்பு நிலையம்.

___________________________________________________________________________


 

கௌதமனின் இயக்கத்தில் விளைவு

 

புதிய காணொளி
___________________________________________________________________________
   
மயிலிட்டி விளையாட்டுக்கழகம்
 
மதன் சற்குணநாதனின் வெற்றிகள் தொடர்கின்றது.
 
கண்ணகி விளையாட்டுக்கழகம்
   
___________________________________________________________________________

தாயகத்தில் மயிலிட்டிகடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க இலவச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 07-07-2011 அன்று நடைபெற்றபோது உதவி அரசாங்க அதிபர் திரு வரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் சிறு பங்களிப்பை வழங்கியிருந்தது.
___________________________________________________________________________
தாயகத்தில் மயிலிட்டி மக்களின் கடற் தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 11-01-2012 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்டது.
நன்றி
___________________________________________________________________________

___________________________________________________________________________
சிறிய துறைமுகம்


தாயகத்தில் புலம் பெயர்ந்த மயிலிட்டி மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் வியாபாரிமூலை கடற்கரையில் தங்களுக்கென்று ஒரு இடத்தை வேண்டி அந்த இடத்தில் வான் தோண்டி சிறிய துறைமுகம் அமைத்து மீன்பிடி தொழில் செய்கின்றார்கள்.
நன்றி
___________________________________________________________________________
தாயகம் இன்பருட்டியில் மக்களால் கடற்கரை முருகைக்கு வெளியில் கண்டு எடுக்கப்பட்ட அதிசயப்பொருள். இது ஏற்படுத்திய வெளிச்சத்தையும் புகையையும்தான் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள் அதை ஏற்படுத்தியது இந்த பொருள்தான்.
நன்றி

___________________________________________________________________________

மலரும் நினைவுகள்

இந்தப்படத்தை பார்க்கும்போது பல ஞாபகங்களை மீட்டுகின்றன. பலர் இன்று இதே வயதுள்ள பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றனர். அவனது பல குறும்பான செயல்கள், கோயில் திருவிழாக்களின் அவனது தொண்டுகளையும் எம்மால் மறக்கமுடியாது. குறிப்பாக ராகவனின் இழப்பு எமது ஒற்றுமையின்மையையும், நாம் பலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்துகின்றது.
புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

___________________________________________________________________________
செல்வன் மதன் சற்குணநாதன் 03-10-11 அன்று இந்தியா சென்னையில் நடந்த மோட்டார் சயிக்கிள் போட்டியில் முதல் இடங்களை பெற்றார். இந்த வெற்களை தொடர்ந்து THAILAND போட்டியில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கும் போய் வெற்றிபெற்று அவரது பெற்றோருக்கும், மயிலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
___________________________________________________________________________

 

உலகத்தலைநகர் இலண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்குமேலாக இயங்கிவரும் அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர்16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இரவு 09.00மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்துகடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த சித்திரத் தேரை தீவைத்து அழித்துள்ளனர்.
இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்தபொலிசாரும் தீயணைப்புப்படையினரும் செயற்பட்டு தீயை ஏனய கட்டிடங்களுக்குப் பரவாதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாதஅளவிக்கு எரிந்துவிட்டது.
___________________________________________________________________________
கல்வி கற்க உதவி

மயிலிட்டி டொட் கொம்மின் முதன்மையும் தனித்துவமுமான செயல்களில் அத்தபடியாக எமது சிறுவர்களின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் அவர்களை மேலும் படிப்பதற்கு ஊக்குவித்து அவர்களை வருங்காலத்தில் படித்தவர்களாக முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக மயிலிட்டி டொட் கொம் தாயகத்தில் எந்தவித வசதியும் இன்றி படிக்க ஆர்வம் உள்ள எமது பிள்ளைகளுக்கு படிப்புக்கு தேவையான உபகரணங்கள், மற்றும் ( ரியூஷன் ) பணம், இவைகளை உதவி செய்யவுள்ளது. ஆர்வம் உள்ள மயிலிட்டி பிள்ளைகள் திரு வடிவேஸ்வரன், திரு இளங்குமரன், மற்றும் பொறுப்பாளர்களுடன்  தொடர்பு கொள்ளவும்.

நன்றி
___________________________________________________________________________
படிப்பகம்


வியாபாரிமூலை தெனி அம்மன் கோவிலடியில் வெளிநாடுகளில் வாழும் மயிலிட்டி மக்களின் உதவியுடன் மயிலிட்டி மக்கழுக்கென்று ஒரு வாசிகசாலை புதிதாக கட்டி 2012 தைப்பொங்கல் அன்று சம்பிரதாயப்படி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நன்றி

___________________________________________________________________________
வினாயகர் ஆலயம்


மயிலிட்டி மருதடி வரசித்தி வினாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்தது. ஆனால் மிகவும் குறுகிய நாட்கள் இருந்தமையால் செல்லமுடியவில்லை எனவே வேறு ஒரு நாள் போவதிற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது என அறிகின்றோம். அனுமதி கிடைத்ததும் அறிவிக்கின்றோம்.
நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களுக்காக எமது முதலாவது என்ற செயற்பாட்டின் வரிசையில்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம், மயிலிட்டி டொட் கொம்,
மயிலிட்டி டொட் கொம் வானொலி, அந்த வரிசையில் மிக விரைவில் அடுத்தது வரப்போகின்றது. உங்களின் ஒத்துழைப்பும் நல்லாசியும் இருக்கும்வரை மயிலிட்டி மக்களுக்காக வேறு யாரும் செய்யாததை முதலாவது செய்யும் என்ற வரிசை தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

___________________________________________________________________________
மக்களை பிரிக்காதீர்கள்


பிருத்தானியா லண்டனில் சிலர் கோயில்களின் பெயரைச் சொல்லி மயிலிட்டி மக்களை பிரிக்க முயற்சி செய்வதை அறிகின்றோம். மயிலிட்டி மக்களை ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றுதான் கேட்கின்றோம். பொய்களை பரப்பி மக்களை பிரிப்பவர்களிடம் இருந்து தடுக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
1990ம் ஆண்டு மயிலிட்டியை விட்டு நாம் வெளியேறிய பிறகு பல வருடங்களின் பின் குறிப்பிட்ட சிலர் தங்கள் முயற்சியால் முருகன், அம்மன் கோயில்களுக்கு இரண்டு கோயில்களையும் சேர்ந்தவர்கள் சென்று வழிபட்டு வந்தார்கள். நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டிருக்கின்றோம். இரண்டு கோயில்களுக்கும்தான் போனது என்பதற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கின்றது. தேவை ஏற்படின் அதையும் மக்களுக்கு காண்பிப்போம்.
இதை எழுதவேண்டிய காரணம் லண்டனில் ஒரு சில குடும்பம்  கோயில்களுக்கு போக ஏற்பாடு செய்தவர்களின்மேல் உண்மையில்லாத பொய்களை கூறி தாங்கள் தனியாக பணம் சேர்த்து ஒரு கோயிலுக்கு மட்டும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இப்படி செய்து மக்களை பிரிக்கப்பார்க்கிறார்கள்.
எனி வரும் காலங்களில் மயிலிட்டியில் நாலு ஐந்து பெரிய கோயில்கள் இருக்கின்றது இவைகளை மயிலிட்டி மக்கள் ஒன்றாக நினைத்து ஒற்றுமையாக செயல்படுத்தவேண்டும் என்பதுதான் எமது பெரிய விருப்பம்.
எவ்வளவு கஸ்ரப்பட்டு அனுமதி பெற்று பல பஸ்கள் மூலம் மக்களை ஏற்றி இறக்கி அன்னதானம் என்று இவைகள் எல்லாவற்றையும் செய்து முடித்த அவர்களை வெளிநாட்டில் இருந்துகொண்டு குறை கூற நாங்கள் யார் அவர்கள் மனது எவ்ளவு கஸ்ரப்படும் மயிலிட்டி மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள். மேலும் இது சம்மந்தமாக சந்தேகம் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________
மயிலிட்டி மக்கள் மத்தியில் முதலாவது வானொலிச்சேவையை மயிலிட்டி டொட் கொம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மயிலிட்டி மக்களும் நேரடியாக ஸ்கைப் மூலம் உங்கள் வாழ்த்துச்செய்திகள் மற்றும் ஆக்கங்களுடன் கலந்து சிறப்பிக்கலாம். எமக்கு அனுப்பிவைத்தும் ஒலி பரப்பலாம். வானொலியின் சிறப்புக்கு என்ன தேவை என்பதின் உங்கள் கருத்துக்களை எமது மின் அஞ்சல் முகவரிக்கு worldwide@myliddy.com அனுப்பிவைக்கவும்.

நன்றி
மயிலிட்டி டொட் கொம்
___________________________________________________________________________
மயிலிட்டியில் காணி விற்பனைக்கு
___________________________________________________________________________
கலைமகள் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் புத்தக வெளியீடு. 3வது பாகத்தை மயிலிட்டி மக்களால் கனடாவில் வெளியிடுகின்றனர். அதே தினம் அதிபர் அவர்களுக்கும், திருமதி இரத்தினம் அவர்களுக்கும் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு ஆற்றிய சேவைக்காக மயிலிட்டி மக்களால் கெளரவித்து சிறப்பும் செய்யவுள்ளார்கள். இன் நிகழ்வில் அனைத்து மயிலிட்டி மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். நடைபெறும் காலம் மற்றும் அனைத்து விபரங்களும் பிறகு அறிவிக்கப்படும்.
நன்றி

___________________________________________________________________________
மயிலிட்டியின் ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு இணையம். தற்போது 7 இணையம் மேலும் வரப்போகின்றது. இதன் முக்கியத்துவம் என்ன ?
___________________________________________________________________________
நன்றிகூறல்


திரு வடிவேஸ்வரன், திரு இளங்குமரன் அவர்களை நாங்கள் முதன்முதலாக பல வருடங்களுக்குமுதல் தாயகத்தின் பொறுப்பாளர்களாக இருந்து உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று வரை மிகவும் சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள். தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டால் எந்த இடம் என்றுலும் நேரில் சென்று செய்து முடிப்பார்கள். மயிலிட்டி டொட் கொம்மும், மயிலிட்டி சங்கமும் வளர்ந்ததிற்கு திரு வடிவேஸ்வரன் அவர்களின் முக்கிய பங்கு உண்டு. சிலர் அவர்களை வேறு விதமாக அழைப்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டோம். எமக்கு அவர்கள் பொறுப்பாளர்கள்தான். இதற்காக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நன்றியுடன் மயிலிட்டி டொட் கொம்

___________________________________________________________________________
கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பண்டிதர் சி.அப்புத்துரை
___________________________________________________________________________
மயிலிட்டி மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

மயிலிட்டி பெரியோர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து மயிலிட்டி மக்களின் வரலாறு பற்றி எழுதி புத்தகமாக வெளியிடவுள்ளனர், ஏற்கனவே சிலர் எழுதியுள்ளார்கள் அவற்றில் எல்லாம் முழுமையாக இல்லை என்பதனால் அவற்றையும் உள்ளடக்கி மயிலிட்டி மக்களின் வாழ்க்கை, தொழில்கள், பெரியோர்கள், கோயில்கள், விளையாட்டுக்கழகங்கள், படிப்பகங்கள், நாடகம், சினிமா, இன்னும் பல தெரியாமல் இருக்கலாம் இவை எல்லாம் உள்ளடக்கி புத்தகமாக வெளியிடவுள்ளார்கள் குறிப்பாக, வேல்வீதி, திருப்பூர், காலான்காடு, முலவை, கொத்தாவத்தைக்கு பின்னால் உள்ள மக்களும் சேர்ந்து எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள், அதற்கு அனைத்து மயிலிட்டி மக்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து, இது ஒரு வரலாற்று புத்தகமாக வருவதிற்கு உதவி செய்யும்படி மிகவும் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றார்கள், உங்களுக்கு தெரிந்தவர்களின் தொடர்புகளை எற்படுத்தி கொடுப்பதே பெரும் உதவியாக இருக்கும் இதுபற்றிய கோள்விகளுக்கும் உதவிகளுக்கும்,
திரு இராசரத்தினம் (நேசம்) நாகேந்திரம் 44 208 2050947 UK
திரு இரத்தினராசா விஜயரத்தினம் 416 7241255 CANADA
திரு குணபாலசிங்கம் அருணாசலம் 94 773144883 JAFFNA
திரு. சின்னத்தம்பி இராமநாதன் JAFFNA
மயிலிட்டி டொட் கொம்முடன் தொடர்பு கொண்டாலும் இவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித்தருவோம்.

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம்மிற்கு மயிலிட்டியில் இருக்கும் கோயில்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இவற்றில் சில கோயில்கள் எங்கே இருந்தது என்பது தெரியவில்லை இவை எங்கே இருந்தது என்ற விபரத்தை தெரிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும், இவை மயிலிட்டி வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டியவை, இவற்றில் இல்லாத கோயில்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்தவும்.

நன்றி மயிலிட்டி டொட் கொம் worldwide@myliddy.com

___________________________________________________________________________
பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.!

வடபகுதியில் உள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நேற்று (23) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது, சிறீலங்கா அரசின் பிரதம அதிகாரியான தினேஸ் குணவர்த்தனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருகின்றனர். 1129 வீடுகளை இராணுவத்தினரும், 35 வீடுகளை கடற்படையினரும், 32 வீடுகளை வான்படையினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடுகள் அனைத்தும் பெருமளவான நிலங்களுடன் பயன்பாட்டில் உள்ளதுடன், இரண்டு அரிசி ஆலைகளும் படையினரின் வசம் உள்ளது என தெரிவித்துள்ளார்

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம்மின் அறிவிப்பு

தாயகத்தில் எந்தவிதமான உதவியும் கிடைக்கப்பெறாத மயிலிட்டி மக்கள்
தாயகப்பொறுப்பாளர்கள் திரு வடிவேஸ்வரன்,
திரு இளங்குமரன் (குட்டிப்பால்), இவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மயிலிட்டி மக்களிற்கு உங்களால்முடிந்தளவு சிறுதுளி பெருவெள்ளம் ஒரு ரூபா என்றாலும் உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்ளுகின்றோம், உதவி செய்ய விரும்பும் நல் உள்ளம் படைத்தவர்கள் மயிலிட்டி டொட் கொம் இன் PAYPAL மூலமாகவும், உங்கள் பங்களிப்பை செய்யமுடியும்.
worldwide@myliddy.com
 

Share



 







Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player